பெரியகுளம் கல்லூரியில் புத்தகக் கண்காட்சி

பெரியகுளம்  ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியில் திங்கள், செவ்வாய் ஆகிய 2 நாள்கள் புத்தக கண்காட்சி நடைபெற்றது.

பெரியகுளம்  ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியில் திங்கள், செவ்வாய் ஆகிய 2 நாள்கள் புத்தக கண்காட்சி நடைபெற்றது.
 கல்லூரி முதல்வர் எஸ்.சேசுராணி தலைமை வகித்து, கண்காட்சியைத் தொடக்கி வைத்தார். எழுத்தாளர் அல்லி உதயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நல்ல புத்தகங்கள் , சிறந்த நண்பர்கள் என்ற தலைப்பில் பேசினார். 
கல்லூரி செயலாளர் குயின்சிலி, ஜெயந்தி புத்தகங்களை வாசிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசினார்.
 கண்காட்சியில் தேனி, திண்டுக்கல், மதுரை,  சிவகாசி, திருநெல்வேலி மற்றும் சென்னையை சேர்ந்த புத்தக விற்பனையாளர்கள் பங்கேற்றனர். புத்தக வாசிப்பதால் அறிவு வளருமா - ஆளுமை வளருமா என்ற தலைப்பில் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட பட்டிமன்றம் செவ்வாய்க்கிழமை  நடைபெற்றது.
 பட்டிமன்றத்திற்கு விலங்கியல் துறை பேராசிரியர் கேத்தரின் தலைமை வகித்தார். புத்தகம் படித்தால் ஆளுமையும் அறிவும் வளரும் என தீர்ப்பளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உதவி நூலகர் அற்புத சகாயம் மற்றும் ஆங்கிலத்துறை பேராசிரியர் ப்ரீத்தி மற்றும் நூலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். கல்லூரி நூலகரும் மற்றும் கல்லூரி துணை முதல்வர் பாத்திமா மேரி சில்வியா நன்றி கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com