திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் தோற்றால் நாங்கள் கட்சியைக் கலைத்துவிட்டு அனைவரும் அதிமுகவில் சேர்ந்து விடுவோம் என அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க. தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் அண்ணாவின் 110 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு பெரியகுளத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: அதிமுக அமைச்சர்கள் குடும்பத்தை பாதுகாப்பதில்தான் குறியாக இருக்கிறார்கள். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அமமுக தோற்றால் கட்சியை கலைத்து விட்டு அனைவரும் அதிமுகவில் இணைந்து விடுகிறோம். மாறாக நாங்கள் வெற்றி பெற்றால் அதிமுக சின்னம் மற்றும் கட்சியை எங்களிடம் தந்துவிடவேண்டும் என்றார்.
இதில் அக்கட்சியின் நகர்ச் செயலாளர் எம்.பன்னீர்செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.