தேனி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை கல்வி நிறுவனங்கள் சார்பில் ஆசிரியர் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.
உறவின்முறை தலைவர் ஆர்.முருகன் தலைமை வகித்தார். பொருளாளர் ஜவஹர் முன்னிலை வகித்தார். மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி இயக்குர் ராஜா கோவிந்தசாமி சிறப்புரையாற்றினார். முன்னதாக பொதுச் செயலர் ராஜமோகன் வரவேற்றார். நாடார் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயலர் ஏ.ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.