போடி கல்லூரியில் தொழில் வழிகாட்டல் கல்வி மையம் தொடக்கம்

போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை தொழில் வழிகாட்டல் மற்றும் வேலைவாய்ப்பு கல்வி மையம் தொடக்க விழா


போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை தொழில் வழிகாட்டல் மற்றும் வேலைவாய்ப்பு கல்வி மையம் தொடக்க விழா நடைபெற்றது.
இக்கல்லூரியின் கருத்தரங்க கூடத்தில் நடைபெற்ற இவ் விழாவில் கல்லூரி முதல்வர் டி.ராஜகுமாரன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மதுரை தேசிய வங்கிக் கல்வி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வெ.வெங்கடாசலம் கலந்து கொண்டு பேசுகையில், போட்டித் தேர்வுகள் மற்றும் அதற்கு எவ்வாறு மாணவர்கள் தயாராக வேண்டும் என்பது குறித்து விளக்கிப் பேசினார்.
இதில் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படிக்கும் மாணவ, மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முன்னதாக கல்லூரி பேராசிரியர் சி.இளங்கோ வரவேற்றார். கல்லூரி ஆங்கில பேராசிரியர் வே.அருண்குமார் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com