பெரியகுளம் அருகே உள்ள டம் டம் பாறை பகுதியில் கழுத்து அறுபட்ட நிலையில் இளைஞரின் சடலத்தை போலீஸார் செவ்வாய்க்கிழமை மீட்டனர்.
தேவதானப்பட்டி சரக வனக்காப்பாளர் சுரேஷ், செவ்வாய்க்கிழமை டம்டம் பாறை அருகே உள்ள பட்டறை பாறை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ரத்தக் கறை இருந்ததை கண்டறிந்தார். பின்னர், வனப்பகுதியில் தீவிரமாக ஆய்வு செய்தபோது, சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கழுத்து அறுபட்டவாறு அழுகிய நிலையில் கிடந்துள்ளது. அதையடுத்து, தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் சுரேஷ் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து, சடலத்தை மீட்டனர். மேலும், அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீஸார் விசாரித்து
வருகின்றனர்.