முன்விரோதம்: இளைஞரை தாக்கியவர் கைது

பெரியகுளம் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞரை தாக்கியவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

பெரியகுளம் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞரை தாக்கியவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
பெரியகுளம் அருகே உள்ள சரத்துப்பட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (47). இவரது உறவினர்கள் ராமர், வீரமணி ஆகியோருக்கும், கண்ணனுக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் பழனிசாமி, புதன்கிழமை பெரியகுளத்துக்கு வந்துள்ளார். அப்போது டி.கள்ளிப்பட்டி அருகே சென்றபோது கண்ணன், செல்வம், சுரேஷ், சக்திவேல் உள்பட 6 பேர் சேர்ந்து, பழனிசாமியை தாக்கியுள்ளனர். அதனை விலக்க வந்த அஜீத் என்பவரையும் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த பழனிசாமி பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து தென்கரை போலீஸார் வழக்குப்பதிந்து சக்திவேலை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் ஐந்து பேரை தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com