கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் கணித அசோசியேஷன் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பல்கலைக்கழகத் துணைத் தலைவர் டாக்டர் எஸ். சசிஆனந்த் தலைமையில் நடைபெற்றது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜெ. பால்ராஜ் ஜோசப் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, அசோசியேஷன் செயல்பாடுகளைத் தொடக்கி வைத்தார். துணைவேந்தர் எஸ். சரவணசங்கர், பதிவாளர் வெ. வாசுதேவன்ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, துறைத் தலைவர் அ. துரைச்சாமி வரவேற்றார். டீன் சி. ராமலிங்கம் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் ஏராளமான மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.