சிவகாசி நகர பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, அக்கட்சியின் நகரத் தலைவர் நாகலிங்கம் தலைமை வகித்தார்.
மாவட்ட வர்த்தக அணி நிர்வாகி பழனிச்சாமி, மாநிலச் செயற்குழு உறுப்பினர் கோ. பார்த்தசாரதி உள்ளிட்டோர் பேசினர்.
கூட்டத்தில், சிவகாசி ரயில் நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைக்கு நகரப் பேருந்து இயக்க வேண்டும். சிவகாசி நகராட்சிப் பகுதியில் உள்ள 7 மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியையும், 2 கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டியையும் மாதம் ஒரு முறை சுத்தம் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மாவட்ட துணைத் தலைவர் தங்கராஜ், நகர துணைத் தலைவர் ஜி. ஆறுமுகச்சாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக, நகரப் பொதுச் செயலர் குருநாதன் வரவேற்றார்.