விருதுநகரில் சுதந்திரப் போராட்ட தியாகிகள் புகைப்படக் கண்காட்சி

விருதுநகர் அருங்காட்சியகத்தில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட 145 தியாகிகளின் புகைப்படக் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விருதுநகர் அருங்காட்சியகத்தில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட 145 தியாகிகளின் புகைப்படக் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    இக் கண்காட்சியில், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், வேலு நாச்சியார், பகத்சிங், ஊமைத்துரை உள்ளிட்ட பலரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.  
     இக்கண்காட்சியை ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் கண்டு களித்தனர்.  இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த தங்கம்மாள் பெரியசாமி நகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெயஸ்ரீ, சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகம் குறித்து விளக்கினார்.
   கண்காட்சியானது ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, அருங்காட்சியக காப்பாட்சியர் கிருஷ்ணம்மாள் செய்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com