ஸ்ரீவிலி. அருகே விழிப்புணர்வுப் பேரணி

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மகாராஜபுரம் கிராமத்தில் தூய்மை இந்தியா இயக்கம் சார்பில், திறந்தவெளி கழிப்பிடத்தை தவிர்க்க வலியுறுத்தி, 

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மகாராஜபுரம் கிராமத்தில் தூய்மை இந்தியா இயக்கம் சார்பில், திறந்தவெளி கழிப்பிடத்தை தவிர்க்க வலியுறுத்தி,  விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
       தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மு. சந்திரபிரபா முத்தையா விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்துத் தொடக்கி வைத்து பேசினார்.
      பின்னர், எம்.எல்.ஏ. தலைமையில் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள்,  திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
     பள்ளியில் தொடங்கிய இப்பேரணியானது, முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியில், பள்ளியின் தலைமையாசிரியர் வீரபாண்டியராஜ், வத்ராயிருப்பு வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துமாணிக்கம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலர் எஸ்.எம். பாலசுப்பிரமணியன், முன்னாள் மாவட்டக் கவுன்சிலர் முத்தையா, வத்ராயிருப்பு ஒன்றியச் செயலர் சுப்புராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com