விருதுநகரில், தமிழ்நாடு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
மாநிலத் தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். இதில், மாநிலப் பொதுச் செயலர் பால்முருகன் கலந்துகொண்டு பேசுகையில், ஊதிய மாற்றத்தை அமல்படுத்துவதற்காகவும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய ஜாக்டோ-ஜியோ பேரவை ஆகஸ்ட் 22 இல் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துகிறது. அதில், மருந்தாளுனர்கள் சங்கம் பங்கேற்கும். மேலும், செப்டம்பர் 7 முதல் நடைபெற உள்ள காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் அனைவரும் முழுமையாகப் பங்கேற்க வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில், 33 மாவட்டங்களிலிருந்து 75 பெண் மருந்தாளுநர்கள் உள்பட சுமார் 250 பேர் பங்கேற்றனர். முன்னதாக, மாவட்டத் தலைவர் ராஜகுரு வரவேற்றார்.
முடிவில், மாநிலச் செயலர் விஜயகுமரன் நன்றி கூறினார்.