விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே ஆண்டாள்புரத்தில் உள்ள பஞ்சுகளை சுத்திகரிக்கும் ஆலையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில், பஞ்சு மூட்டைகள் எரிந்து சேதமாகின.
ராஜபாளையம் மலையடிப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர், ஆண்டாள்புரத்தில் பஞ்சுகளை சுத்திகரிப்பு செய்யும் ஆலை நடத்தி வருகிறார். கடந்த வாரம் இவரது ஆலைக்கு 4 லாரிகளில் வந்த பஞ்சு பொதிகளை, ஆலையின் முன்புறம் இருப்பு வைத்திருந்துள்ளார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவில் பொதிகளுக்கு அருகே இருந்த அரவை இயந்திரத்தின் மின்மோட்டாரிலிருந்து மின்கசிவு ஏற்பட்டு, பஞ்சு பொதிகளில் தீப்பற்றியது. நூற்றுக்கும் மேற்பட்ட பொதிகள் ஒரே இடத்தில் வைக்கப்பட்டிருந்ததால், தீ அனைத்துப் பகுதிகளுக்கும் பரவியது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த ராஜபாளையம் தீ அணைப்பு மீட்புக் குழுவினர், சுமார் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.