விருதுநகரில் வீட்டின் பூட்டை உடைத்து நான்கரை பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
விருதுநகர் பாலன் நகரைச் சேர்ந்தவர் அலெக்ஸாண்டர் (50). இவர், தனியார் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரூபி ஸ்டெல்லா மேரி (42), பேராலி பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிகிறார்.
இந்நிலையில், இருவரும் வெள்ளிக்கிழமை வேலைக்குச் சென்றுவிட்டனர். பின்னர், மாலையில் இருவரும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, அலமாரியில் வைக்கப்பட்டிருந்த நான்கரை பவுன் நகைகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இது குறித்த புகாரின்பேரில், விருதுநகர் பாண்டியன் நகர் போலீஸார் வழக்குப் பதிந்து, காவல் துறை மோப்ப நாயை சம்பவ இடத்துக்கு கொண்டு வந்தனர். மோப்ப நாய் ரயில் நிலையம் வரை ஓடி நின்றது. மேலும், போலீஸார் விசாரித்து வருகின்றனர்.