ஸ்ரீவிலி. அருகே மதுபானக் கடையை உடைத்து சேதப்படுத்திய வழக்கில் இருவர் கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசு மதுபானக் கடையை உடைத்து மதுபாட்டில்களை சேதப்படுத்தியதாக இருவரை, போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். மேலும், பலரை தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசு மதுபானக் கடையை உடைத்து மதுபாட்டில்களை சேதப்படுத்தியதாக இருவரை, போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். மேலும், பலரை தேடி வருகின்றனர்.
வன்னியம்பட்டி-சத்திரப்பட்டி சாலையில் மொட்டமலையில் இயங்கி வரும் மதுபானக் கடையின் மேற்பார்வையாளராக ஆர். ரெட்டியபட்டி வடக்கு காலனியை சேர்ந்த பெ. முருகன் (45) என்பவர் உள்ளார். வெள்ளிக்கிழமை கடையைத் திறக்க பணியாளர்கள் சங்கிலிராஜ் மற்றும் பாண்டியராஜுடன் முருகன் சென்றுள்ளார். அப்போது, கிழவன்கோவிலைச் சேர்ந்த அய்யனார் மகன் செல்வராஜ் தலைமையில் ஒரு கும்பல், அக்கடையின் பூட்டை கற்களால் உடைத்து, உள்ளே புகுந்து அங்கிருந்த மதுபாட்டில்களை சேதப்படுத்திக் கொண்டிருந்துள்ளனர். இதில், ரூ. 89,110 மதிப்பிலான மதுபாட்டில்கள் சேதம் அடைந்துள்ளன.
இது குறித்து முருகன் வன்னியம்பட்டி காவல் நிலையத்தில், அ. செல்வராஜ் (44), ந. நாகராஜ் (21), பெ. வீரமலை, ரா. ஆனந்த், செல்வி, சரஸ்வதி, சுபாஷினி, பாண்டியம்மாள், சுப்பாத்தாள், மஞ்சு, சீதா மற்றும் பல ஆண்கள் பல பெண்கள் மீது புகார் தெரிவித்தார். அதன்பேரில், காவல் ஆய்வாளர் ஜெ. மகேஸ்குமார் வழக்குப் பதிவு செய்து, செல்வராஜ் மற்றும் நாகராஜை கைது செய்தார். மற்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com