அடிப்படை வசதிகள் இல்லாத அரசு தொழிற்பயிற்சி மையம்

சாத்தூரில்  அரசு தொழிற்பயிற்சி மையத்துக்கு அடிப்படை வசதிகளை செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாத்தூரில்  அரசு தொழிற்பயிற்சி மையத்துக்கு அடிப்படை வசதிகளை செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்தூரில் கடந்த ஆட்சியில் தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது.  தாற்காலிகமாக சாத்தூர் காமராஜபுரத்தில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாக வாடகை கட்டடத்தில் வகுப்புகள் இயங்கி வருகிறது.அரசு தொழிற்பயிற்சி நிலையம் என்பதால் சாத்தூர் பகுதியை சுற்றியுள்ள ஏராளமான மாணவ,மாணவிகள் ஆர்முடன் இதில் சேர்ந்து பயிற்சி பெற்று வருகின்றனர். ஆனால் இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில்  கழிப்பட வசதி, குடிநீர் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை.
இதுகுறித்து தொழிற்பயிற்சி நிலைய பயிற்றுநர்கள் கூறுகையில்,  பயிற்சிநிலையத்திற்கான ஆவணங்களை கூட பாதுகாப்பாக வைக்க முடியவில்லை. தொழிற்பயிற்சி நிலைய புதிய கட்டடத்துக்கு இடத் தேர்வு நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறி வருகின்றனர். இருப்பினும் பணிகள் தாமதமாகி வருகிறது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com