சாத்தூர் அருகே அணைக்கரைப்பட்டியில் உலக மண்வள தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வேளாண்மைதுறை சார்பில் நடைபெற்ற விழாவில் சாத்தூர் வேளாண்மை உதவி இயக்குநர் சுப்புராஜ் தலைமை வகித்தார்.வேளாண்மை அலுவலர் குமரன், மண்ணின் முக்கியதுவம்,மண்ணில் உள்ள இயற்கை வளங்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். அணைக்கரைப்பட்டி பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.வேளாண்மை துணை அலுவலர் புஷ்பவள்ளி நன்றி கூறினார். உதவி வேளாண்மை அலுவலர்கள் பாண்டியம்மாள், பூமாரியம்மாள் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.