தளவாய்புரம் அருகே இருசக்கர  வாகனத்திலிருந்து  தவறி விழுந்து முதியவர் சாவு

விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த முதியவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். 

விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த முதியவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். 
   தளவாய்புரம் அருகே செட்டியார்பட்டியை சேர்ந்தவர் அன்பழகன் (67). சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்த நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த இவர் கடந்த நவம்பர் 25 ஆம் தேதி தளவாய்புரம் அருகே புத்தூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது தலைசுற்றல் ஏற்பட்டு கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அன்பழகன் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு செவ்வாய்க்கிழமை இறந்தார். 
இதுகுறித்து உறவினர் அமுதா கொடுத்த புகாரின் பேரில் தளவாய்புரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்துவருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com