மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு பள்ளி நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.
விருதுநகர் மாவட்ட பள்ளிகளுக்கிடையே கேரம் போட்டி ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்றது. இப்போட்டியில் ஸ்ரீவில்லிபுத்தூர், மகாத்மா வித்யாலாயா பள்ளி மாணவி மாரீஸ்வரி வெற்றி பெற்றார். அவருக்கு புதன்கிழமை பள்ளித் தாளாளர் ஜி.எஸ்.முருகேசன் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார்.