அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சாத்தூரில் அங்கன்வாடி பணியாளர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சாத்தூரில் அங்கன்வாடி பணியாளர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.    
       விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பகுதியில் காலமுறை ஊதியம், பணி நிரந்தரம், பழைய பென்சன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அங்கன்வாடி ஊழியர்கள் சாத்தூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
     ஆர்ப்பாட்டத்துக்கு, அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க வட்ட கிளைச் செயலர் லீலாவதி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சாரதாபாய் முன்னிலை வகித்தார். சத்துணவு ஊழியர் சங்க மாநிலச் செயலர் அய்யமாள் வாழ்துரை வழங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் சிவக்குமார், அரசு ஊழியர் சங்க வட்ட கிளைத் தலைவர் ஜெய்கணேஷ் உள்ளிட்ட சாத்தூர் பகுதியைச் சேர்ந்த ஏராளமான அங்கன்வாடி ஊழியர்கள் கலந்துகொண்டனர்.  சிஐடியூ மாவட்ட உதவித் தலைவர் அசோகன் நன்றி கூறினார். 
    இதேபோல், வெம்பக்கோட்டை ஊட்டச்சத்து  அலுவலகம் முன்பும் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com