சிவகாசி அருகே மங்களம்-கிருஷ்ணன்கோவில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு டிராக்டரில் மணல் ஏற்றப்பட்டு வந்துள்ளது. உடனே, போலீஸார் அதனை நிறுத்தி விசாரணை நடத்தினர். அதில், உரிய அனுமதியின்றி மணல் கடத்தப்படுவது தெரியவந்துள்ளது. இது குறித்து எம்.புதுப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, டிராக்டரை ஓட்டிவந்த எம்.புதுப்பட்டி செல்வத்தை (40) கைது செய்து, டிராக்டரையும் பறிமுதல் செய்தனர்.