சிவகாசியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

சிவகாசி மத்திய சுழற்சங்கம் சார்பில், புதன்கிழமை இரவு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

சிவகாசி மத்திய சுழற்சங்கம் சார்பில், புதன்கிழமை இரவு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    விஜயகுமார் சுழற்சங்க மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, அச்சங்கத் தலைவர் பி.எஸ். ஜனகர் தலைமை வகித்தார். செயலர் பவுன்ராஜ் ஆண்டறிக்கை வாசித்தார்.
இதில், இங்குள்ள அழகன் காப்பகத்தில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கும் சீருடை வழங்கப்பட்டது.  சிவகாசி அரசு மருத்துவமனைக்கு 13 பிளாஸ்டிக் இருக்கைகள், 10 பிளாஸ்டிக்  குப்பைத் தொட்டிகள் வழங்கப்பட்டன.தனலட்சுமி என்ற ஏழை பெண்ணுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் புயலினால் பாதிக்கப்பட்டவருகளுக்கு ரூ. 1 லட்சம் மதிப்பிலான துணிகள் வழங்கப்பட்டன. இந்த நலத்திட உதவிகளை, சங்க மாவட்ட ஆளுநர் சின்னதுரை அப்துல்லா  வழங்கினார்.
     நிகழ்ச்சியில், சங்க உதவி மாவட்ட ஆளுநர் நிர்மலா, சங்க மாவட்டச் செயலர் சோமசுந்தரம், முன்னாள் உதவி ஆளுநர்கள் அண்ணாமலையான், பாஸ்கர்ராஜ், சங்க நிர்வாகிகள் கதிரேசன்,அசோக்குமார், ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சுரேஷ் தர்ஹா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com