சாத்தூரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே நடுச்சூரன்குடியைச் சேர்ந்த ஞானசேகரன், திலகராஜ் ஆகிய இருவரும் கடந்த 21 ஆம் தேதி துலுக்கபட்டி அருகே வைப்பாற்றில் மணல் திருடச் சென்றபோது, போலீஸாரால் தாக்கப்பட்டு உயிரிழந்தாகக் கூறப்படுகிறு. இது குறித்து காவல் துறை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சாத்தூரில் உள்ள மதுரை பேருந்து நிறுத்தம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.