பலசரக்குக் கடையின் பூட்டை உடைத்து  பொருள்கள் திருட்டு

அருப்புக்கோட்டை நெசவாளர் காலனி பகுதியில் பலசரக்குக் கடை வைத்திருப்பவர் கலைமணி மகன் சுப்பிரமணியன் (42).

அருப்புக்கோட்டை நெசவாளர் காலனி பகுதியில் பலசரக்குக் கடை வைத்திருப்பவர் கலைமணி மகன் சுப்பிரமணியன் (42). இவர், சனிக்கிழமை இரவு கடையைப் பூட்டிவிட்டு, வீட்டுக்குச் சென்றுவிட்டார். ஞாயிற்றுக்கிழமை கடை விடுமுறை என்பதால், திங்கள்கிழமை கடையைத் திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு சிகரெட் பாக்கெட்டுகள் உள்ளிட்ட ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து அருப்புக்கோட்டை நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com