விருதுநகரில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சாமிபிராணி தயாரிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், ரூ. 10 லட்சம் மதிப்பிலான வாசனை பொருள்கள் எரிந்தன.
விருதுநகர் கச்சேரி சாலையில் தனசேகரன் என்பவருக்கு சொந்தமான சாம்பிராணி தயாரிக்கும் நிறுவனம் மற்றும் சேமிப்பு அறை உள்ளது. இதில், 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில், இந்த நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தொழிலாளர்கள் யாரும் பணிக்கு வரவில்லை. ஆனால், அன்றைய தினம் இரவு மின்சாரம் காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்த விருதுநகர் தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில், சாம்பிராணி தயாரிக்க பயன்படுத்தப்படும் ரூ.10 லட்சம் மதிப்பிலான 15 டன் குங்குலியம் என்ற மூலப்பொருள்கள் எரிந்து நாசமாயின.