புதிய வாக்காளராக சேர டிச.15 கடைசி நாள்

ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் பொதுமக்கள் டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள்

ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் பொதுமக்கள் டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் செய்ய விண்ணப்பிக்கலாம் என, தொகுதி தேர்தல் பிரிவு அதிகாரி அறிவித்துள்ளார்.     2018 ஜனவரி 1 ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு 2018 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் மேற்கொள்ளுதல் தொடர்பான சுருக்கத் திருத்தப் பணியை, இந்திய தேர்தல் ஆணையம் 2017 டிசம்பர் 15 வரை காலநீட்டிப்பு செய்து உத்தரவிட்டது.     2018 ஆம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் 2018 ஜனவரி 5 இல் வெளியிடப்படுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, 2018 ஜனவரி 10 ஆக மாற்றப்பட்டுள்ளது. பொதுமக்கள் டிசம்பர் 15-க்குள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் செய்ய விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம் உத்தரவின் பேரில், ராஜபாளையம் வட்டாட்சியர் சரவணன் மற்றும் தேர்தல் அதிகாரி  கேட்டுக்கொண்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com