கத்தியைக் காட்டிமிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது

சிவகாசியில் தனியார் நிறுவன காவலாளியிடம் சனிக்கிழமை இரவு கத்தியை காட்டிமிரட்டி பணம் பறித்ததாக இருவரை போலீஸார் கைது செய்தனர்.

சிவகாசியில் தனியார் நிறுவன காவலாளியிடம் சனிக்கிழமை இரவு கத்தியை காட்டிமிரட்டி பணம் பறித்ததாக இருவரை போலீஸார் கைது செய்தனர்.
சிவகாசியைச் சேர்ந்த குருசாமி(66). தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரிடம்  இருவர் வந்து கத்தியை காட்டிமிரட்டி பையில் இருந்த பணம் ரூ. 600 ஐ பறித்துள்ளனர். அக்கம்பக்கத்தாரின் உதவியோடு இருவரையும் பிடித்து குருசாமி போலீஸில் ஒப்படைத்தார்.
விசாரணையில் அவர்கள் முருகன்காலனி அழகர்சாமி மகன் மாடசாமி(28), சுப்பிரமணியபுரம் காலனி கருப்பையா மகன் தங்கேஸ்வரன்(23) எனத் தெரியவந்தது. சிவகாசி கிழக்கு போலீஸார் இருவரையும் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com