சிறு விசைத்தறியாளர்கள், நெசவாளர்கள் வேலைநிறுத்தம்

ஜிஎஸ்டியில் விலக்கு கோரி,  அருப்புக்கோட்டையில் சிறு விசைத்தறியாளர்கள் மற்றும் நெசவாளர்கள்ஆகஸ்ட் 5 வரை தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

ஜிஎஸ்டியில் விலக்கு கோரி,  அருப்புக்கோட்டையில் சிறு விசைத்தறியாளர்கள் மற்றும் நெசவாளர்கள்ஆகஸ்ட் 5 வரை தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு கோரி அருப்புக்கோட்டை  சிறு விசைத்தறித் துணி உற்பத்தியாளர்கள் மற்றும் நெசவாளர்கள் வெள்ளிக்கிழமை ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.  அடுத்த கட்டமாக ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப் போவதாக விசைத்தறியாளர்கள் மற்றும் நெசவாளர்கள் அறிவித்துள்ளனர்.
மேலும் மனிதச்சங்கிலி, பேரணி, உண்ணாவிரதம்  உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்துள்ளனர். இப்போராட்டத்தில் சுமார் 7000த்துக்கும் மேற்பட்ட சிறு விசைத்தறியாளர்கள் மற்றும் சுமார் 25,000  நெசவாளர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com