தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பாக ராஜபாளையம் வட்டார அளவிலான எறிபந்து போட்டி கேசா டி மிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 14,17,19 வயது ஆண்கள் பிரிவினருக்கிடையே 8 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர்.
திருவள்ளுவர் நகர் அரசு உயர் நிலைப் பள்ளி போட்டியினைப் பொறுப்பேற்று நடத்தியது. கேசா டி மிர் பள்ளியின் முதல்வர் செல்வக்குமார் போட்டிகளைத் தொடக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளையும் பள்ளி நிர்வாகம் செய்திருந்தது.