பட்டாசுத் தொழிலாளி கொலை வழக்கில் கோவில்பட்டி நீதிமன்றத்தில் 6 பேர் சரண்

சிவகாசியில் பட்டாசுத் தொழிலாளி கொலை வழக்கில் திங்கள்கிழமை கோவில்பட்டி நீதிமன்றத்தில் 6 பேர் சரண் அடைந்தனர்.

சிவகாசியில் பட்டாசுத் தொழிலாளி கொலை வழக்கில் திங்கள்கிழமை கோவில்பட்டி நீதிமன்றத்தில் 6 பேர் சரண் அடைந்தனர்.
சிவகாசி அருகே பள்ளபட்டி இந்திராநகரைத் சேர்ந்த மாரிமுத்து மகன் பட்டாசுத் தொழிலாளி தங்கப்பாண்டி(34).  இவர் கடந்த வெள்ளிக்கிழமை தேவராஜ் காலனியில் நடந்து சென்றபோது,  ஒரு கும்பல வழிமறித்து  வெட்டி கொலை செய்தது. சம்பவம் குறித்து சிவகாசி கிழக்குப் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடிவந்தனர்.
இந்நிலையில் இக்கொலை தொடர்பாக பள்ளபட்டி காளிமுத்துவின் மகன் மாரிச்செல்வம்(32), இவரது தம்பி சுப்புராஜ்(29), ரத்தினம் மகன் கணேசன்(33),  சுப்புராஜ் மகன் ஆனந்த ராஜ்(32),  அய்யாக்கண் மகன் மனோகர்(32), ஜமீன் சல்வார்பட்டி சின்னப்பாண்டி மகன் வீர ஈஸ்வரன்(29)ஆகிய 6 பேர் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரண் அடைந்தனர்.  அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com