சிவகாசியில் 9 இடங்களில்  உயர்மின்கோபுர விளக்கு

சிவகாசி ஊராட்சி ஒன்றியப் பகுதியில் 9 இடங்களில் உயர்மின்கோபுர விளக்குகளை ஞாயிற்றுக்கிழமை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடக்கி வைத்தார்.

சிவகாசி ஊராட்சி ஒன்றியப் பகுதியில் 9 இடங்களில் உயர்மின்கோபுர விளக்குகளை ஞாயிற்றுக்கிழமை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடக்கி வைத்தார்.
விருதுநகர் மக்களவை தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் , எம்.புதுப்பட்டி கூடடைடயார் கோவில், அரசு ஆரம்பசுகாதாரநிலையம் முன்பு,  காளையார்குச்சி-எரிச்சநத்தம் சாலையில் முக்குரோடு பேருந்து நிறுத்தம்அருகே, மங்களம் ஊராட்சி கோபாலன்பட்டி,  புதுக்கோட்டை,  சித்தமநாயக்கன்பட்டி,  செவலூர்,  எரிச்சநத்தம்,  வெள்ளூர் ஆகிய ஊர்களில் தலா ரூ 3.30 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள உயர் மின்கோபுர விளக்குகளை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடக்கி வைத்தார்.
அவருடன் சிவகாசி ஊராட்சி ஒன்றிய ஆணையர் சத்தியமூர்த்தி, வட்டாரவளர்ச்சி அலுவலர் வெள்ளைச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com