இளைஞருக்கு அரிவாள் வெட்டு: ஒருவர் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளைஞரை அரிவாளால் வெட்டியதாக ஒருவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளைஞரை அரிவாளால் வெட்டியதாக ஒருவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
  கூமாப்பட்டி ராமசாமியாபுரத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன் மகன் சுந்தர் (22). இவர், சனிக்கிழமை பிளக்கல் அணை சென்றுவிட்டு, இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த கு.குற்றாலம் என்பவர் முன்பகை காரணமாக சுந்தரை வழிமறித்து அரிவாளால் வெட்டி காயப்படுத்தினாராம்.
  இது குறித்து சுந்தர் கூமாப்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸார் குற்றாலம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com