சிவகாசி ஒன்றியத்தில் ரூ.75 லட்சத்தில் உயர் மின்கோபுர விளக்கு, கட்டடம்: அமைச்சர் திறப்பு

சிவகாசி ஒன்றியத்தில் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதி, மக்களவைத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ. 74.80 லட்சம்

சிவகாசி ஒன்றியத்தில் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதி, மக்களவைத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ. 74.80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டடம் மற்றும் உயர் மின்கோபுர விளக்குகளை, பால்வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி  சனிக்கிழமை திறந்து வைத்தார்.
   சிவகாசி ஒன்றியம் ஆணையூரில் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ. 11 லட்சம் மதிப்பில் ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் கூடுதல் கட்டடத்தையும், சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ. 11 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள கலையரங்கத்தையும், அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்.
   விருதுநகர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் தலா ரூ. 3.30 லட்சத்தில் பள்ளபட்டி, சித்துராஜபுரம், நாரணாபுரம், விஸ்வநத்தம் ஆகிய ஊராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள தலா 2 உயர் மின்கோபுர விளக்குகள், வேண்டுராயபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள 3 உயர் மின்கோபுர விளக்குகள், நடுவப்பட்டி, சாமிநத்தம், நிறைமதி, வெள்ளையாபுரம், வடபட்டி ஆகிய ஊராட்சிகளில் தலா 1 உயர் மின்கோபுர விளக்குகளையும் அமைச்சர் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்துவைத்தார்.    இந்த நிகழ்ச்சியில், விருதுநகர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் டி. ராதாகிருஷ்ணன், சிவகாசி ஊராட்சி ஒன்றிய ஆணையர் சத்தியமூர்த்தி, வட்டார வளரச்சி அலுவலர் வெள்ளைச்சாமி, அரசு கல்லூரி முதல்வர் சாந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com