jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


10:48:25 AM
செவ்வாய்க்கிழமை
24 ஏப்ரல் 2018

24 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்

ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில் நூதன முறையில் நகை, பணம் திருட்டு

By DIN  |   Published on : 20th June 2017 06:29 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

சிவகாசியில் திங்கள்கிழமை ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில் நூதனமான முறையில் 19 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ. ஒரு லட்சத்தை மர்மநபர் திருடிச் சென்றார்.
சிவகாசி அரசு மருத்துமனை அருகே பெரியகுளம் காலனியில் வசிப்பவர் ஓய்வு பெற்ற போராசிரியர் பரமானந்தம்(70). இவரது மனைவி திலகம். திங்கள்கிழமை பகலில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் பரமானந்தம் வீட்டிற்கு வந்து, தன்னை நகராட்சி துப்பரவுப் பணியாளர் எனவும், உங்கள் வீட்டில் கழிவறை தொட்டி அடைப்பை சரி செய்யுமாறு உயர் அதிகாரி அனுப்பியதாகவும் கூறியுள்ளார்.
எந்த அதிகாரி என பரமானந்தம் கேட்டபோது, அந்த நபர் செல்லிடப்பேசி மூலம் பேசி,  பேராசிரியர் வீட்டிற்கு வந்து விட்டேன். நீங்கள் கூறிய வேலைகளை செய்து முடித்து விட்டு வருகிறேன் எனக் கூறினாராம்.  இதை நம்பிய பரமானந்தம், வீட்டினுள் வரச்சொல்லி பணியை செய்யச் சொல்லியுள்ளார். உடல்நலத்துக்காக மருந்து சாப்பிடுவதால் அவர் அறைக்கு ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார்.  வீட்டுப் பணியாளரும், திலகமும் துப்புரவு பணியாளரின் பணியை மேற்பார்வையிட்டுள்ளனர்.
அப்போது அந்த நபர், குளியலறையில் தண்ணீரை ஊற்றுங்கள்,  அடைப்பு எங்கிருக்கிறது என நான் பார்க்கிறேன் எனக் கூறி வெளியில் சென்றுள்ளார். சுமார் 30 நிமிடம் ஆகியும் காணாததால் நகராட்சிக்கு பரமானந்தம் போன் செய்து, துப்பரவுப் பணிக்கு அனுப்பினீர்களா என கேட்டராம். நகராட்சியிருந்து அப்படி யாரையும் நாங்கள் அனுப்பவில்லை என கூறியதையடுத்து சந்தேகம் அடைந்து பீரோவைத் திறந்து பார்த்தபோது அதிலிருந்த 19 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.1 லட்சம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து பரமானந்தம் அளித்த புகாரின் பேரில் சிவகாசி காவல் துணை கண்காணிப்பாளர் வி.கண்ணன் நேரில் வந்து விசாரணை நடத்தினார். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு, அது ரயில்நிலையம் வரை சென்று  நின்று விட்டது. தடயவியல் நிபுணர்கள் கைரேகையை ஆய்வு செய்தனர். சம்பவம் தொடர்பாக சிவகாசி நகர் குற்றப்பிரிவு ஆய்வாளர் மரியகுளோரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

O
P
E
N

புகைப்படங்கள்

பக்கா 
நாயகி இஷாரா நாயர் - சாஹில் திருமணம்
மதுரை சித்திரைத் திருவிழா 
சச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து
ஷாலினி பாண்டே
அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி

வீடியோக்கள்

ஜெயகாந்தன் 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா
தலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்
இளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது
ஜெயின் துறவியாக மாறிய என்.ஆர்.ஐ. பெண்
இனி அணு ஆயுத சோதனை இல்லை
நாடு திரும்பினார் பிரதமர் மோடி
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்