அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் கிளையின் 4-ஆவது மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
துணைத் தலைவர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவி சி.ஜோதிலட்சுமி, மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி கருத்துரையாற்றினார். முறையான குடிநீர் வசதி செய்ய வேண்டும். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.