ராஜபாளையத்தில் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் தளவாய்பாண்டியன் தலைமை வகித்தார். சோனியா பேரவை மாவட்டத் தலைவர் ரவிராஜா முன்னிலை வகித்தார். ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ராஜபாளையம் கிழக்கு வட்டார காங்கிரஸ் சார்பில் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உதவிகளை கிழக்கு வட்டார தலைவர் ஆ.ரெங்கசாமி வழங்கினார். உடன் மாவட்ட நிர்வாகிகள் சங்குத்துரை, ராஜ்மோகன் மற்றும் வட்டார நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.