ராஜபாளையம் சத்யா வித்யாலயா பள்ளியில் யோகாசனப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பள்ளித் தாளாளர் குமரேசன் தலைமை வகித்தார். நிர்வாக அதிகாரி அரவிந்த் வரவேற்றார். சத்யா வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளி ஆலோசகர் பாரதி முன்னிலை வகித்தார். போட்டிகளில் 500 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு பிரிவிலும் தனித்தனியாக போட்டி நடத்தப்பட்டு முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு டாக்டர் கோதண்டராமன் பரிசுகளை வழங்கினார். ஏற்பாடுகளை பள்ளி ஒருங்கிணைப்பாளர் அமுதா தலைமையில் ஆசிரியர்கள் ஷர்மிளா, சத்யா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். யோகா ஆசிரியர் சுந்தர் நன்றி கூறினார்.