நூறு நாள் பணி வழங்கக் கோரி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

வெம்பக்கோட்டை அருகே நதிக்குடி ஊராட்சி பகுதியில், 100 நாள் வேலைத் திட்டத்தில் பணி வழங்கக் கோரி மூன்று கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானத்திடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர்.

வெம்பக்கோட்டை அருகே நதிக்குடி ஊராட்சி பகுதியில், 100 நாள் வேலைத் திட்டத்தில் பணி வழங்கக் கோரி மூன்று கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானத்திடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர்.
 அந்த மனுவில் கூறியிருப்பதாவது: வெம்பக்கோட்டை ஒன்றியம் நதிக்குடி, ராமன்பட்டி, கிருஷ்ணாபுரம் முதலான கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 600 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். இவர்களில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் விவசாய கூலி தொழிலாளர்கள். கடந்த இரண்டு மாதமாக இப்பகுதியில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பொதுமக்களுக்கு பணி வழங்கவில்லை. எனவே, 100 நாள் வேலை திட்டத்தில் எங்களுக்கு பணி வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com