மதுபானக் கடையை மூடக் கோரி முற்றுகை

சிவகாசி அருகே மதுபானக் கடையை மூடக் கோரி, பொதுமக்கள்  அக்கடையை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

சிவகாசி அருகே மதுபானக் கடையை மூடக் கோரி, பொதுமக்கள்  அக்கடையை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
   சிவகாசி அருகே கொத்தனேரியில் மதுபானக் கடை ஒரு மாதத்துக்கு முன் திறக்கப்பட்டது. இந்தக் கடையை மூடக் கோரி, அப்பகுதியினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
   தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வட்டாட்சியர் ஸ்ரீதரன், புதிய விதிகளின்படி ஊரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் கடை அமைக்கப்பட்டுள்ளது என்ற போதிலும், பொதுமக்கள் விருப்பப்படி கடை மூடப்படும். மேற்கொண்டு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார் எனக் கூறி, கடையை மூட உத்தரவிட்டார். அதையடுத்து, அந்தக் கடை மூடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com