விருதுநகர் அருகே உள்ள சூலக்கரை துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.
எனவே, காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, இங்கிருந்து மின் விநியோகம் பெறும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சூலக்கரை, ஆயுதப்படை காவலர் குடியிருப்பு, அழகாபுரி, மீசலூர், செவல்பட்டி, தாதம்பட்டி, தொழிற்பேட்டை, மாடர்ன் நகர், மாத்திநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என,
மின்வாரியச் செயற்பொறியாளர் திருப்பதி தெரிவித்துள்ளார்.