கூரைக்குண்டு கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொடடி இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதால் அதை உடனே சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் அருகே உள்ள கூரைக்குண்டு கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகும். இதன் காரணமாக தொட்டியின் வெளி புறத்தில் சிமெண்ட் பெயர்ந்து விழத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் ஊராட்சி நிதியில் இந்த நீர்த் தேக்கத் தொட்டி சீரமைக்கப்பட்டது. ஆனாலும், தற்போது மீண்டும் அது சேதமடைந்துள்ளது. இதனால், அவ்வழியே செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, சேதமடைந்த இந்த மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது புதிய தொட்டி கட்டித் தர வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.