சிவகாசி ரிசர்வ் லைன் அரிமா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை குழந்தைகள் தின விழா நடைபெற்றது.
இதனையொட்டி, பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஓட்டப் பந்தயம் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
பரிசளிப்பு விழாவுக்கு, பள்ளித் தாளாளர் என். இளங்கோவன் தலைமை வகித்தார்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, தொழிலதிபர் பி.சி.ஏ. ஆசைத்தம்பி பரிசுகளை வழங்கினார். மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக, தொழில் நகர் அரிமா சங்கத் தலைவர் ஆர்.வீ. முனீஸ்வரன் வரவேற்றார். பள்ளி முதல்வர் பி. காளீஸ்வரன் நன்றி கூறினார்.