பள்ளியில் குழந்தைகள் தின விழா

சிவகாசி ரிசர்வ் லைன் அரிமா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை குழந்தைகள் தின விழா நடைபெற்றது.

சிவகாசி ரிசர்வ் லைன் அரிமா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை குழந்தைகள் தின விழா நடைபெற்றது.
     இதனையொட்டி, பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஓட்டப் பந்தயம் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
     பரிசளிப்பு விழாவுக்கு, பள்ளித் தாளாளர் என். இளங்கோவன் தலைமை வகித்தார்.
  போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, தொழிலதிபர் பி.சி.ஏ. ஆசைத்தம்பி  பரிசுகளை வழங்கினார். மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக, தொழில் நகர் அரிமா சங்கத் தலைவர் ஆர்.வீ. முனீஸ்வரன் வரவேற்றார். பள்ளி முதல்வர் பி. காளீஸ்வரன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com