ராஜபாளையம் அருகே கீழராஜகுலராமன் பகுதியில் மணல் கடத்திய இருவரை, போலீஸார் திங்கள்கிழமை கைது செய்து, 2 டிராக்டர்களையும் பறிமுதல் செய்தனர்.
கீழராஜகுலராமன் போலீஸார் நல்லமநாயக்கன்பட்டி சாலையில் ரோந்து சென்றனர். அப்போது, மணல் கடத்தி வந்த 2 டிராக்டர்களை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், அனுமதியின்றி மணல் அள்ளப்பட்டு வருவது தெரியவந்தது. அதையடுத்து, டிராக்டரை ஒட்டி வந்த நல்லமங்கலத்தைச் சேர்ந்த மாரிராஜ்(37) மற்றும் கன்னிதேவன்பட்டியைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் (50) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து, 2 டிராக்டர்களையும் பறிமுதல் செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.