ரூ.200 லஞ்சம் பெற்ற வழக்கு: இளநிலை உதவியாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக இளநிலை உதவியாளர் ரூ.200 லஞ்சம் வாங்கிய வழக்கில், அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்டத் தலைமை நீதித்துறை நடுவர்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக இளநிலை உதவியாளர் ரூ.200 லஞ்சம் வாங்கிய வழக்கில், அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்டத் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கியது.
ஸ்ரீவில்லிபுத்தூர், மாதாங்கோயில் தெருவைச் சேர்ந்தவர் கலைச்செல்வன் (48). இவர், வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 2007-ஆம் ஆண்டு விண்ணப்பித்திருந்தார்.   அப்போது, ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து வந்த அகமது மசூது என்பவர் வாரிசு சான்றிதழ் வழங்க ரூ. 200 லஞ்சம் கேட்டுள்ளார். 
இது குறித்து, கலைச்செல்வன் விருதுநகரில் உள்ள லஞ்ச ஒழிப்பு காவல் துறையில் புகார் செய்தார்.  போலீஸார் ஆலோசனையின்பேரில், கடந்த 19.7.2007-ஆம் தேதி வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியிலிருந்த அகமது மசூதுவிடம் கலைச்செல்வன் ரூ. 200 லஞ்சம் கொடுக்கும்போது, மறைந்திருந்த போலீஸார் அவரைக் கையும் களவுமாகப் பிடித்தனர்.  இது தொடர்பாக,  ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்டத் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஆர். வசந்தி,  தற்போது விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த் துறையில் இளநிலை உதவியாளராகப் பணிபுரியும் அகமது மசூதுவுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 40 ஆயிரம் அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீர்ப்பளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com