பள்ளியில் குழந்தைகள் தின விழா

சிவகாசி ஜேஸீஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சிவகாசி ஜேஸீஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
     நிகழ்ச்சிக்கு, ஜேஸீஸ் சங்கத் தலைவர் செந்தில் ஆண்டவர் தலைமை வகித்தார். குழந்தைகள் தின விழாவினையொட்டி நடைபெற்ற ஓவியப் போட்டி, மாறுவேடப் போட்டி, பேச்சுப் போட்டி உள்ளிட்டவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு தாளாளர் வேம்பார் பரிசு வழங்கினார்.
    இதில், பள்ளி முதல்வர் சித்ரா ஜெயந்தி மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக, மாணவர் அசோக் மாணிக்கம் வரவேற்றார். மாணவர் பிரணவ் கிருஷ்ணா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com