விருதுநகர்
ராகிங் தடுப்பு விழிப்புணர்வு முகாம்
கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் தொழில்நுட்பக் கல்லூரியில் ராகிங் தடுப்பு விழிப்புணர்வு முகாம், பல்கலைக்கழகத் துணைத் தலைவர் எஸ். அர்ஜூன் கலசலிங்கம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் தொழில்நுட்பக் கல்லூரியில் ராகிங் தடுப்பு விழிப்புணர்வு முகாம், பல்கலைக்கழகத் துணைத் தலைவர் எஸ். அர்ஜூன் கலசலிங்கம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவில், விருதுநகர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம். ராஜராஜன் கலந்துகொண்டு, ராகிங் மூலம் ஏற்படும் விளைவுகள் பற்றியும், அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகளையும் விளக்கினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சங்கரேஸ்வரன், கிருஷ்ணன்கோவில் காவல் ஆய்வாளர் மூக்கன்ஆகியோர் ராகிங் தடுப்பு முறைகள் குறித்து விளக்கினர். முன்னதாக, முதல்வர் எஸ். ஹரிகிருஷ்ணன் வரவேற்றார்.
ஏற்பாடுகளை, பேராசிரியர் எ. மணிகண்டன் ராகேஷ் செய்திருந்தார். பேராசிரியர் விஜயா நன்றி கூறினார்.