ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக பாஜக தலைவர் அமித்ஷா மகனை கைது செய்யக் கோரி ராஜபாளையத்தில் புதன்கிழமை விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில பொதுக்குழு உறுப்பி னர் ராஜலிங்கராஜா தலைமை வகித்தார். காங்கிரஸ் தலைவர் தளவாய்பாண்டியன் ஆர்ப் பாட்டத்தை தொடக்கி வைத்தார். நிர்வாகிகள் குமாரசாமிராஜா, சக்திமோகன், சங்குத்துரை முன்னிலை வகித்தனர். நகரத் தலைவர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.