ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் தொல்லியல் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரி வரலாற்றுத் துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் வெங்கட்ராமன் தலைமை வகித்தார். தமிழக தொல்லியல் துறை முன்னாள் இணை இயக்குநர் சந்திரவாணன் , முன்னாள் பேராசிரியர் சந்திசேகரன் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்று பேசினர்.
முன்னதாக, வரலாற்று மன்றச் செயலர் ரமேஷ் குமார் வரவேற்றார். வரலாற்றுத் துறைப் பேராசிரியர் வெங்கடேஸ்வரன் நன்றி கூறினார்.