அதிமுக தோற்றுவிக்கப்பட்டு 46 ஆண்டுகளாவதையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுகவினர் செவ்வாய்க்கிழமை கொண்டாடினர்.
தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் மு. சந்திரபிரபா மற்றும் முன்னாள் மாவட்டக் கவுன்சிலர் த. முத்தையா ஆகியோர் தலைமையில் ஏராளமான அதிமுக தொண்டர்கள், பேருந்து நிலையத்தில் உள்ள கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்புகள் வழங்கினர்.
மேலும், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர், ஒன்றியம், வத்திராயிருப்பு ஒன்றியப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரபிரபா கட்சிக் கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில், கட்சியின் ஒன்றியச் செயலர் எஸ்.கே. மயில்சாமி, கூட்டுறவு நகர வங்கித் தலைவர் எஸ்.எம். பாலசுப்பிரமணி, நகர் பொருளாளர் கருமாரி எஸ். முருகன், வத்திராயிருப்பு ஒன்றியச் செயலர் சுப்புராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.