விருதுநகர் மாவட்டத்தில் அக்டோபர் 21 மின்தடை

விருதுநகர் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (அக்.21) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

விருதுநகர் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (அக்.21) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.
 எனவே, மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை இங்கிருந்து மின் விநியோகம் பெறும் விருதுநகர் மற்றும் புறநகர் பகுதிகளான லட்சுமி நகர், என்ஜிஓ காலனி, கருப்பசாமி நகர், குல்லூர்சந்தை, வடமலைக்குறிச்சி, பெரிய வள்ளிக்குளம், மல்லாங்கிணறு, பேராலி, பாவாலி, ஆமத்தூர், சத்திரரெட்டியபட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என, செயற்பொறியாளர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.
அருப்புக்கோட்டை:   மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, அருப்புக்கோட்டை துணைமின் நிலையப் பகுதிகளான நகர், பெரிய புளியம்பட்டி, பந்தல்குடி, பாளையம்பட்டி, கல்குறிச்சி, ஆத்திபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.
தமிழப்பாடி துணை மின்நிலையப் பகுதிகளான தமிழ்ப்பாடி, இலுப்பையூர், திருச்சுழி, பனையூர், ஆனைக்குளம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் சனிக்கிழமை பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என, தமிழ்நாடு மின்பகிர்மானக் கழக அருப்புக்கோட்டை கோட்டச் செயற்பொறியாளர் ஆர். கண்ணன் தெரிவித்துள்ளார்.
மல்லிபுத்தூர் (ஸ்ரீவில்லிபுத்தூர்):  ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டத்தில் உள்ள மல்லிபுத்தூர் துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை (அக். 21) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.
    எனவே, காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி இத் துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் மல்லிபுத்தூர், நாகபாளையம், மாயத்தேவன்பட்டி, அப்பையநாயக்கன்பட்டி, நக்கமங்கலம், மல்லி, டி.மானகசேரி, கோப்பையநாயக்கன்பட்டி, வேண்டுராயபுரம், சாமிநத்தம், ஈஞ்சார் விலக்கு, ராஜா நகர், சிவா நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் அக்.25-இல் மின்தடை: ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் படிக்காசுவைத்தான்பட்டி துணை மின்நிலையங்களில் அக்டோபர் 25-ஆம் தேதி (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.
எனவே, அன்றைய தினம் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை இத் துணை மின்நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர், சித்தாலம்புத்தூர், மம்சாபுரம், குட்டதட்டி, வெங்கடேஸ்வரபுரம் மற்றும் வன்னியம்பட்டி, வைத்தியலிங்கபுரம், கொத்தன்குளம், வன்னியம்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, ராஜபாளையம் சாலை, கரிசல்குளம், லட்சுமியாபுரம் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என, கோட்டச் செயற் பொறியாளர் ஆர்.செல்வம் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com