கல்லூரிக்குச் செல்லும் பாதையை தார் சாலையாக மாற்ற கோரிக்கை

மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிக்குச் செல்லும் பாதை சேறும் சகதியுமாக இருப்பதால், தார் சாலை அமைத்துத் தரவேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிக்குச் செல்லும் பாதை சேறும் சகதியுமாக இருப்பதால், தார் சாலை அமைத்துத் தரவேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அருப்புக்கோட்டை அருகே மதுரை-தூத்துக்குடி நான்குவழிச் சாலையில் செட்டிக்குறிச்சி கிராமம் உள்ளது. இங்கிருந்து சுமார் 1 கி.மீட்டர் தொலைவில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி உள்ளது. இக்கல்லூரிக்குச் செல்லும் வழியில் தார் சாலை வசதி ஏற்படுத்தவில்லை. இதனால், கடந்த 2 வாரங்களாக பெய்த தொடர் மழை காரணமாக, இக் கல்லூரிப் பாதை சேறும் சகதியுமாகி முற்றிலும் பயன்படுத்த இயலாத நிலைக்கு மாறிவிட்டது.
இப்பாதையில் தான் இக்கல்லூரியில் பயிலும் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தினமும் சென்று வர வேண்டும். எனவே, மாணவர்களின் நலன் கருதி கல்லூரிக்குத் தனிச் சாலை வசதி செய்து தரவேண்டும் என மாணவ, மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com